காதலன் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை

by Staff / 11-05-2023 02:35:51pm
காதலன் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை

திருவள்ளூர்:மாவட்டம்  செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்டோ டிரைவர் டில்லி, மனைவி சாந்தி தம்பதி. இவர்களுடைய மகள் நந்தினி (16). பூந்தமல்லியில் +1 படித்து வந்தார். நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். விசாரணையில் ஆவடி கோவர்த்தனகிரியைச் சேர்ந்த தேவா (17) என்பவர், +2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் கடந்த தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரை நந்தினி காதலித்து வந்ததும், காதலன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

 

Tags :

Share via