மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையா

by Staff / 15-05-2023 02:07:09pm
மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையா

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை தான் என்றும், பாலியில் துன்புறுத்தலுக்கு அல்லது கொலைக்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. ஒன்பது மாத விசாரணைக்கு பின் தற்போது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சிபிசிஐடி. சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் ஸ்ரீமதி மரணத்திற்கு காரணம் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via