பிளாட்பாரத்தில் பொறிபறந்த பட்டாக்கத்தி.. தட்டிதூக்கிய போலீஸ்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் சிலர் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில், பட்டாக்கத்தியுடன் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் வீடியோ ஆதாரத்தைக் கொண்டு கல்லூரி மாணவர்களான, சரண்ராஜ் மற்றும் அபினேஷ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :