பூஜை அறையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு

by Staff / 18-05-2023 03:47:23pm
பூஜை அறையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு

கோவை மாவட்டம், பீளமேடு, சௌரிபாளையம், ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் இவரது மனைவி உமா இவர்களுக்கு திருமணமாகி பாலச்சந்தர் என்ற மகன், உள்ளார், இந்த நிலையில், நேற்று, உமா வழக்கம்போல வீட்டின், பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்து சாமி கும்பிட்டுள்ளார், அப்போது எதிர்பாராத விதமாக உமாவின் சேலையில் தீப்பிடித்து எரிந்துள்ளது, உடல் முழுவதும், தீ பரவிய நிலையில் உமா, அலரி துடித்தார், உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, உமாவை மீட்டு உடனடியாக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உமா சிகிச்சை பலனின்றி நேற்று, உயிரிழந்தார், சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via