10 பேர் சுட்டுக் கொலை

by Staff / 21-05-2023 03:11:30pm
10 பேர் சுட்டுக் கொலை

மெக்சிகோ நாட்டின் கார் பந்தைய வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஜா கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று கார் பந்தையம் நடைபெற்றது. இந்த கார் பந்தையத்தில் 50க்கு மேற்பட்ட கார் பந்தைய வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் வந்த நிலையில், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த கும்பல் கார் பந்தைய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via