கலாஷேத்ரா பாலியல் வழக்கு - புது திருப்பம்
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கில் புதிய திருப்பமாக மாணவிகள் தங்களுக்கும் இந்த புகார்க்கும் எந்த சம்மதமும் இல்லை என்று கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மாநில மகளிர் ஆணையம் 162 மாணவிகளிடம் விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து அந்த மாணவிகள், "நாங்கள் எந்த விதமான பாதிப்புகளும் உள்ளாகவில்லை, எங்களது ஆசிரியர்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது" என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2 வாரத்தில் 10 மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Tags :