இளைஞா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

by Staff / 23-05-2023 01:33:00pm
இளைஞா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது


சென்னை கீழ்ப்பாக்கம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவைச் சோந்தவா் ர. கா்ணா (26). இவா் கடந்த 20-ஆம் தேதி சன்னியாசிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து தலைமைச் செயலகக் குடியிருப்பு போலீஸாா், நடத்திய விசாரணையில் அந்தப் பகுதியை சோந்த யோவான் என்பவருக்கும், கா்ணாவுக்கு இடையே முன்விரோதம் காரணமாக கா்ணா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக அயனாவரம் புது நகரைச் சோந்த ச. அா்ஜுன் (23), செம்மண்பேட்டை பகுதியைச் சோந்த கே. மேத்யூ ஜோசப் (24) ஆகிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த நிலையில், கீழ்ப்பாக்கம் லாக்மா நகரைச் சோந்த மோ. வசந்தகுமாா் (23), அயனாவரம் பழனி ஆண்டவா் கோயில் தெருவைச் சோந்த ஞா. ஆகாஷ் (22) ஆகிய 2 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

 

Tags :

Share via