குழந்தை மீது ஏறி இறங்கிய கார்
பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை கவனக்குறைவாக சாலையில் விடுவதால் பல நேரங்களில் விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பெண் குழந்தை ஒன்று சாலையில் தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று குழந்தையின் மீது ஏறி இறங்கியது. விபத்து நடந்ததை அறியாத கார் ஓட்டுநரும் அங்கிருந்து சென்றுவிட்டார். காரின் இரண்டு டயர்களும் ஏறிய நிலையிலும் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
Tags :