மதுபோதையில் கிணற்றில் தவறி விழந்து கூலித்தொழிலாளி பலி
பொள்ளாச்சியை அடுத்துள்ள காளியாபுரம் பகுதியை சேர்நதவர் காளிமுத்து இவரது இளைய மகன் முருகேஷ், கூலித்தொழிலாளியான இவருக்கும் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு காளிஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த முருகேஷ்க்கு குடிபழக்கும் இருப்பதால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்துள்ளார்
நேற்றிரவு வழக்கம் போல் மது குடித்துவிட்டு செல்லபிள்ளை ராசுகவுண்டர் தோட்டத்திற்கு சென்று கிணற்று மேட்டில் நின்று கொண்டிருந்த போது கால் தவறி கிணற்றில் முருகேஷ் விழந்தார் நீச்சல் தெரியததால் மூச்சு திணறி பலியானார்.பின்னர் கிணற்றில் இருந்து முருகேஷின் உடலை மீட்ட ஆனைமலை போலீசார் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
Tags :