ஒடிசா முதல்வரிடம் ரயில் விபத்து குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.

by Editor / 03-06-2023 12:03:01am
ஒடிசா முதல்வரிடம் ரயில் விபத்து குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் தடம்புரண்டது தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன்பட் நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்க இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு ரயிலுடன் மோதி 7 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via