மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: ரயில்வே அமைச்சர்

by Staff / 03-06-2023 03:24:39pm
மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: ரயில்வே அமைச்சர்

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள கோபால்பூர், கந்தபாரா, பாலசோர், பட்ராக், சோரோ, கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும், மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மறுசீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via