தமிழ்நாடு பெயர் மாறி கஞ்சா நாடு என ஆகிறது - அன்புமணி ராமதாஸ்

by Staff / 13-07-2023 01:25:09pm
தமிழ்நாடு பெயர் மாறி கஞ்சா நாடு என ஆகிறது - அன்புமணி ராமதாஸ் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் - தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது. கூலிப்படை கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். காவல் துறைக்கு கஞ்சா விற்பனை பற்றி தெரியும் - கஞ்சாவை யார் விற்பனை செய்கிறார்கள் - எப்படி வருகிறது எல்லாம் தெரியும். ஆனால் நடவடிக்கை இல்லை. ஆளுநரும் முதல்வரும் இனைந்து செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது' என்றார்.
 

Tags :

Share via