ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்
அசாமில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனிக்கிழமை ஓடும் ரயிலில் பெண் ஒருவர் இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குவஹாத்தியில் இருந்து வங்காளத்தில் உள்ள அலிபூர் தர்தாருக்குச் செல்லும் சிஃபாங் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெண் தனது குழந்தையுடன் ஏறியபோது அந்த பெண்ணை இளைஞர் தாக்கியுள்ளார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி அந்த பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.
Tags :