தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம்:மாணவி மீதான வழக்கு ரத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.அப்போது அதே விமானத்தில் பயணித்த சோபியா என்ற மாணவி பாஜகவுக்கு எதிராகவும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராகவும் தீடீரென கோஷமிட்டார்.இதனை அடுத்து அவர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய, மாணவி லூயிஸ் சோபியா மீதான வழக்கை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags : தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம்: