நடிகர் மோகன்லால் வழக்கில் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

by Staff / 22-08-2023 05:36:08pm
நடிகர் மோகன்லால் வழக்கில் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

நடிகர் மோகன்லாலுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிர்ச்சி அளித்துள்ளது. இவர் மீது யானை தந்தம் வைத்திருந்ததாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது. இந்த வழக்கில் நவம்பர் 3ஆம் தேதி பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தப்பட்டது. முன்னதாக ஒரு நபர் யானை தந்தங்களை மோகன்லாலுக்கு பரிசாக வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.

 

Tags :

Share via