ஒளிப்பதிவாளர் பலி - திருமாவளவன் இரங்கல்
சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்கள் விபத்தில் காலமான செய்தி வேதனையளிக்கிறது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விபத்தில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைந்து நலம் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Tags :