மாமன்னர் பூலித்தேவர் 308 வது ஜெயந்தி விழா அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

by Editor / 01-09-2023 10:47:02am
மாமன்னர் பூலித்தேவர்  308 வது ஜெயந்தி விழா அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்சேவல் பகுதியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர்பூலித்தேவர்  308 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, 
மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமான கலந்து கொண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...

 

Tags : மாமன்னர் பூலித்தேவர் 308 வது ஜெயந்தி விழா

Share via