கஞ்சா விற்பனை ஒருவர் கைது: இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்

by Staff / 02-09-2023 05:49:39pm
கஞ்சா விற்பனை  ஒருவர் கைது: இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் மற்றும் போலீசார் கடந்த 31. 08. 2023 அன்று திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தலை, சூசைநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பெரியதாழை பகுதியை சேர்ந்த சக்கிரியாஸ் மகன் லயோ (33) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரி லயோவை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிலயோ மீது ஏற்கனவே திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், குலசேகரன்ப்பட்டினம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via