வி. பி. சிங், அண்ணா, கருணாநிதி சிலை மாதிரிகளைமுதலமைச்சா் ஆய்வு

by Staff / 07-09-2023 12:46:50pm
வி. பி. சிங், அண்ணா, கருணாநிதி சிலை மாதிரிகளைமுதலமைச்சா் ஆய்வு

மீஞ்சூர் அருகே புதுப்பேடு பகுதியில் தயாராகி வரும் வி. பி. சிங்,  அண்ணா, கருணாநிதி சிலை மாதிரிகளை முதலமைச்சா் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். மீஞ்சூர் அருகே  சிற்பி தீனதயாளன் சிற்பக் கூடம் அமைந்துள்ளது. இந்த சிற்ப கூடத்தில்தான், அண்ணா அறிவாலயம் மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை- மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி. பி. சிங்சிலையை அமைக்கவும்,  அண்ணா, கருணாநிதி சிலைகளை,  நினைவிடங்களில் அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பொருட்டு முன்னாள் பிரதமர் வி. பி. சிங், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி  சிலைகள்  சிற்பக்கூடத்தில் தயாராகி வருகின்றன. முதற்கட்டமாக இந்த சிலைகளின் மாதிரிகள் களிமண்ணால் செய்யப்பட்டுள்ளன. அந்த மாதிரிகளை முதலமைச்சா், சிற்பக் கூடத்துக்கு வருகை புரிந்து, ஆய்வு மேற்கொண்டார்.

 

Tags :

Share via