உங்கள் உழைப்புக்கான உரிமைத் தொகை - உதயநிதி
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “உங்கள் கையில் உள்ள அட்டை உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு. இது உங்கள் உழைப்புக்கான உரிமைத் தொகை. உங்கள் தம்பியாக, மகனாக இதனை பார்த்து பெருமைப்படுகிறேன். பணக்காரன் ஏழை என்ற அடிமைத் தனத்தை விட மேல் கீழ் சாதி என்ற அடிமைத்தனத்தை விட ஆண் பெண் பாகுபாடுதான் கொடுமையான ஏற்றத்தாழ்வு என பெரியார் சொல்லியிருக்கிறார். பெண்கள் முற்போக்காக சிந்திக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும். அப்போதுதான் மொத்த நாடும் முன்னேற்றமடையும்” என தெரிவித்துள்ளார்.
Tags :