சேலத்தில் வாலிபரிடம் ரூ. 8. 10 லட்சம் மோசடி

by Staff / 18-09-2023 01:58:13pm
சேலத்தில் வாலிபரிடம் ரூ. 8. 10 லட்சம் மோசடி

சேலம் சூரமங்கலம் தர்மநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் மஜீத் (34). இவரது செல்போன் வாட்ஸ்அப்-க்கு கடந்த மாதம் 17-ந் தேதி குறுச்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் வந்த செல்போன் எண்ணை முகமது அப்துல் மஜீத் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து பணம் கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதைதொடர்ந்து முகமது அப்துல் மஜீத் பல்வேறு தவணைகளாக ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் வரை பணம் பட்டியுள்ளார். இதனிடையே கட்டிய பணம் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது அப்துல் மஜீத் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து அந்த மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

 

Tags :

Share via