மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படுவதால் பணப்புழக்கம் அதிகரிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விரிவான ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய முதலமைச்சர், 'அரசுக்கும், மக்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படாமல் திட்டக்குழு செயல்படுகிறது. மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படுவதன் மூலம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை இந்த குழுவின் அறிக்கை மூலமே பெறுகிறோம்' என்றார்.
Tags :