மகளுக்கு பாலியல் தொல்லை-தந்தை கைது

by Staff / 25-09-2023 02:06:17pm
மகளுக்கு பாலியல் தொல்லை-தந்தை கைது

கோவை மாவட்டம் வேட்டைக்காரன் குட்டையைச் சேர்ந்தவர் 40 வயது நபர். இவர் அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பவத்தன்று பகலிலேயே குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இவரது மகள் உடல்நிலை சரியில்லை என்று பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இவர் தன்னுடைய மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமி தயாரிடம் தெரிவித்ததை அடுத்து, அவருடைய தாயாரும் சிறுமியும் இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சுமதி அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அந்த 40 வயது நபரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via