தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

by Staff / 26-09-2023 01:00:27pm
தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி தனது வீட்டின் முன்பு தனியாக உட்கார்ந்திருந்த 10 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றார். பின்னர் அவர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுதுக்கொண்டு அவ்வழியாக சென்றவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார். இதுகுறித்து வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில், நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி ராஜசேகரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

 

Tags :

Share via