நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 04-10-2023 04:12:52pm
நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் இவருடைய மகள் யசோதா இவர் அங்குள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மேலும் ஒரு ஆண்டு பயிற்சிக்காக ஈரோடு வந்த யசோதா ஈரோடு பூசாரி சென்னிமலை வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்தார். இந்த நிலையில் தங்கி இருந்த அறையில் உள்ள குளியல் அறையில் யசோதா தூக்கில் தொங்கினார் சத்தம் கேட்டு அறையில் தங்கி இருந்த மாணவிகள் ஓடிச் சென்று பார்த்தனர் பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் யசோதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை வளாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து யசோதா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via