இஸ்ரேல் போர் : தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை

by Staff / 08-10-2023 12:16:20pm
இஸ்ரேல் போர் : தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம், இந்திய தூதரகம் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் 15 தமிழர்கள் வசிப்பதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள தமிழர்களை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via