19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

by Staff / 13-10-2023 03:12:01pm
19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தண்டனையை எதிர்த்து வனத்துறை அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள ஐஎப்எஸ் அதிகாரி எல்.நாதனின் மேல்முறையீட்டு மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், மேலும், 19 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் ஜுன் 20-22, 1992ஆம் ஆண்டு, அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டை, செப்டம்பர் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via