சிக்கன் சாப்பிட்டு சிறுமி, தந்தை உயிரிழப்பு

by Staff / 18-10-2023 01:51:00pm
சிக்கன் சாப்பிட்டு சிறுமி, தந்தை உயிரிழப்பு

திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். கரூர் மாவட்டம், லாலா பேட்டையில் வசித்து வருபவர் கௌதம் ஆனந்த் இவருக்கு வயது 33. இவர் மனைவி பவித்ரா. இவர்களின் ஒரே மகள் 4 வயது மிதுஸ்ரீ கௌதம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை, தந்தையும் மகளும் வீட்டில் சமைத்த, 'சிக்கன்' சாப்பிட்டனர்.அடுத்தடுத்து தந்தை மகள் இருவருமே வயிற்றுவலியால் துடித்தனர். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு நேற்று முன்தினம் இரவு மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் இறந்த துக்கம் தாங்காமல் கௌதம் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். திடீரென அவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via