ரூ. 70 லட்சம் மோசடி செய்தவர்கள் கைது

by Staff / 19-10-2023 02:04:54pm
ரூ. 70 லட்சம் மோசடி செய்தவர்கள் கைது

நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர் தசரதன் (வயது 70). இவரது மனைவி வசந்தலட்சுமி பெயரில் புழல் கிராமம், நீலகண்டன் நகரில், 1, 815 சதுர அடி நிலம் இருந்தது. வசந்தலட்சுமி, 2021ல் இறந்து விட்டார்.இந்நிலையில், போரூர் அடுத்த துண்டலம், செட்டியார் அகரத்தைச் சேர்ந்த ஹரிகோபால் (வயது 46) மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஷீலா (வயது 63) ஆகியோர் போலியான ஆவணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ் மூலம், தினேஷ்பாபு என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலத்தின் மதிப்பு, 70 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.இது குறித்து தசரதன், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். இதன்படி, நில பிரச்னை தீர்வு பிரிவு போலீசார் நேற்று, ஹரிகோபால், ஷீலா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via