மரங்கள் சட்டத்திற்கு புறம்பாக வெட்டப்பட்டு கடத்தப்படும் கும்பலை தடுத்து நிறுத்தி.... நடவடிக்கை எடுக்க வேண்டும்..
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, மங்கலாம் கொம்பு, பெரும்பாறை ஆகிய இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் வனத்துறை சான்றிதழ் இல்லாமல் பல சாதி மரங்கள் சட்டத்திற்கு புறம்பாக வெட்டப்பட்டு லாரிகளில் கடத்தப்பட்டு வருகிறது ,
இப்படி கடத்தப்படும் கும்பலை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து காடுகளை காப்பாற்ற வேண்டும் என்று கூறி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் விஜி திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர் அவர்களிடம் இன்று புகார் அளித்தார். செல்லப்பாண்டி மாநில தொண்டர் அணி செயலாளர் நகரச் செயலாளர் பாபு ஒன்றிய தலைவர் செல்லப்பாண்டிமாநகர இளைஞரணி செயலாளர் முருக பாண்டி என்ற அப்பு ஆகியோர் உடன் இருந்தனர்...
Tags :