கால் கேர்ள்ஸ் சேவை வழங்குவதாக கூறி ரூ.5 கோடி பறிப்பு
கால் கேர்ள் சேவை வழங்குவதாக கூறி இளைஞர்கள், தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.5 கோடியை கொள்ளை கும்பல் பறித்தது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ஒரு கும்பல் போலி இணையதளத்தை உருவாக்கி, பாலியல் தொழிலுக்காக கால் கேர்ள் சேவை வழங்குவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். இவர்கள் சுமார் 80 பேரை மிரட்டி ரூ.5 கோடி வசூல் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
Tags :