வாணியம்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி  பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவு.

by Editor / 26-10-2023 10:01:14am
வாணியம்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி  பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் அருகே வசித்து வந்தவர்  சையத் பாஷா இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.இந்த நிலையில் அவரிடம் சுமார் 300க்கும் மேற்பட்டோர்  மாதம் சீட்டு, வார சீட்டு, தின சீட்டு என பொதுமக்கள்  பணம் கட்டி வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில்   இவர் நேற்று இரவில் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகியதாக தெரிகிறது.இதனால் அவரிடம் சீட்டு கட்டி வந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி டிஎஸ்பி மற்றும்  நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.இதுவரை 200க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறி்த்து பாதிக்கபட்டவர்கள் கூறிய போது சீட்டு நடத்தி வந்த நபர் கடந்த மூன்று வருடங்களாக பழக்கமானவர் என்பதால்  கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தை மாதத் தவணையாக 5 ஆயிரம் முதல்  2000 ரூபாய் வரை அவரிடம் கட்டியதாகவும் இறுதியாக பணத்தை தருவதாகவும் கூறியிருந்தார்.  இன்று எங்கள் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.இவரிடம் இருந்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

Tags : வாணியம்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி  பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவு.

Share via