சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ஆளுநர்,முதல்வர்,அமைச்சர்கள் வரவேற்ப்பு. 

by Editor / 26-10-2023 09:57:05pm
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ஆளுநர்,முதல்வர்,அமைச்சர்கள் வரவேற்ப்பு. 

 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இரண்டு நாள் பயணமாக பெங்களூரு மற்றும் சென்னையில் நடைபெறும் பல்கலைக்கழக நிகழ்வுகளில் பங்கேற்க வந்துள்ளார்.முன்னதாக பெங்களுருவில் நடைபெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பெங்களூரின் பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பெங்களூருவில் அதன் அறக்கட்டளை வாரத்தை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். கடந்த 50 ஆண்டுகளில் ஐஐஎம் பெங்களூர் மேலாளர்களை மட்டுமல்ல, தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாற்றங்களை உருவாக்குபவர்களையும் உருவாக்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.அந்த நிகழ்வை முடித்த குடியரசுத் தலைவர் 
சென்னைவந்தடைந்தார்.சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அவரை வரவேற்றனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, அவர் கலந்துகொள்ளும் விழா நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. நாளை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்  பங்கேற்கிறார். பின்னர் பிற்பகல் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

 

Tags : சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ஆளுநர்,முதல்வர்,அமைச்சர்கள் வரவேற்ப்பு. 

Share via