8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை

by Staff / 27-10-2023 11:08:39am
8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை

கத்தாரில் சில மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அல் தஹ்ரா என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். எனினும், கத்தாரோ அல்லது இந்திய அதிகாரிகளோ அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை இன்னும் வெளியிடவில்லை.

 

Tags :

Share via