அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின்

by Staff / 27-10-2023 03:22:17pm
அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின்

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியது தொடர்பான வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்தால் நேரில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அண்ணாமலை வீட்டின் முன் வைக்கப்பட்ட கொடி கம்பத்தை அகற்றியபோது, போராட்டத்தில் ஈடுபட்ட அமர் பிரசாத் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via