சனாதனத்தை ஒழிக்க வேண்டும்- வழக்கை தள்ளுபடி செய்ய அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்.

by Staff / 01-11-2023 01:22:07pm
சனாதனத்தை ஒழிக்க வேண்டும்- வழக்கை தள்ளுபடி செய்ய அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் இந்து மதத்திற்கு எதிராக பேசி வரும் திமுக எம். பி. ஆ. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவிகளில் நீடிக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி, இந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா்.. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில், திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரினார். உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது கம்யூனிஸ்ட் கட்சி என்றும், மனுதார் நிகழ்ச்சியின் முழு ஆதாரங்களை தாக்கல் செய்யயாதால் வழக்கு நிலைக்கதக்கதல்ல.: தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டாா். மேலும் அவா் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்  இந்த விவகாரத்தை வைத்து, பாரதிய ஜனதா கட்சியினர் ட்விட்டரில் தனி விசாரணையை நடத்துகின்றனர் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார் என்றும்  குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via