வீட்டில் சாப்பிட்ட நிலையில் இறந்து கிடந்த பெண்

by Staff / 03-11-2023 01:12:00pm
வீட்டில் சாப்பிட்ட நிலையில் இறந்து கிடந்த பெண்

சேலம் சர்க்கார்கொல்லபட்டி மேட்டுகாடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கம்பனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி (53) இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
லட்சுமணராஜ் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவி ரேணுகாதேவியிடம் பேசியுள்ளார். அப்போது தனக்கு சளி பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் நேற்று காலை மீண்டும் லட்சுமணராஜ் பலமுறை போன் செய்தும் மனைவி எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணராஜ் வீட்டின் அருகில் இருப்பவர்களை சென்று பார்க்கும் படி தெரிவித்துள்ளார் அவர்கள் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது அவர்கள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை இது பற்றி இரும்பாலை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு ரேணுகாதேவி சாப்பாட்டில் கை வைத்தபடி இறந்து கிடந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via