கஞ்சா விற்பனை செய்த 2பேர் கைது: பைக் பறிமுதல்

by Staff / 04-11-2023 02:24:56pm
கஞ்சா விற்பனை செய்த 2பேர் கைது: பைக் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  வசந்தராஜ் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர்  மேரி ஜெமிதா தலைமையில் உதவி ஆய்வாளர்  பழனிச்சாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிவகளை பரும்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.


அதில்,   பேட்மா நகரம் பகுதியை சேர்ந்த இமாம் தீன் மகன் ஷேக் ஜாபர்அலி (26) மற்றும் சிவகளை பரும்பு பகுதியை சேர்ந்த மாரிமோகன் மகன் பிரபாகரன் (32) என்பதும்  விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், ரொக்க பணம் ரூ. 21, 000 மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரபாகரன் மீது ஏற்கனவே ஏரல் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via