மீண்டும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி
மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்த நிலையில், இன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சைதாப்பேட்டையில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொள்ளும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெற்று இருந்தும் கலந்து கொள்ளவில்லை. உயர்கல்வித்துறை செயலாளரும் கலந்து கொள்ளவில்லை. மேலும், தியாகி சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்துள்ளார்.
Tags :