டெல்லியில் நாளை முதல் பள்ளி விடுமுறை
தலைநகர் டெல்லியில் நாளை முதல் பள்ளி விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளை முதல் நவம்பர் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
Tags :