ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்

by Staff / 11-11-2023 12:08:44pm
ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்

பாகிஸ்தானின் கராச்சியில் மீனவர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரரானார். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இப்ராஹிம் ஹைதரி மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜி பலோச் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த தனது தொழிலாளர்களுடன் அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்களின் வலையில் தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் சிக்கியது. இந்த அரிய வகை மீன்கள் மொத்தம் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு மீன் மட்டும் சுமார் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

 

Tags :

Share via