உத்தரப்பிரதேசதம் வழியாக செல்லும் டெல்லி _தர்பங்கா விரைவு ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ விபத்து...

by Editor / 15-11-2023 08:27:08pm
உத்தரப்பிரதேசதம் வழியாக செல்லும் டெல்லி _தர்பங்கா விரைவு ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ விபத்து...

உத்தரபிரதேசத்தில் எட்டாவா அருகே புது தில்லி-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் (02570) புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. தர்பங்கா குளோன் ஸ்பெஷல் (02570) உத்தரப் பிரதேசத்தில் உள்ள சராய் போபட் ரயில் நிலையம் வழியாகச் சென்றபோது தீ விபத்து ஏற்பட்டது. எஸ்1 கோச்சில் புகை வருவதைக் கண்ட ஸ்டேஷன் மாஸ்டர் ரயிலை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல்களை வெளியாகியுள்ளது.

ஒரு ஸ்லீப்பர் கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் விரைவில் மேலும் மூன்று பெட்டிகள் எரிந்தன.

"காயமோ உயிர்சேதமோ இல்லை. ரயில் விரைவில் புறப்படும்" என்று வட மத்திய ரயில்வேயின் சீனியர் பிஆர்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"தீ விபத்து ஏற்பட்ட போது, ​​நாங்கள் எப்படியோ ரயில் பெட்டியின் ஜன்னல் வழியாக வெளியே வந்தோம். பெட்டியில் தீயை அணைக்க சரியான வழிகள் இல்லை. பெட்டியில் இருந்து இறங்கும் போது சிலருக்கு காயம் ஏற்பட்டது," என்று  பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.எஸ்.பி.சஞ்சய் குமார் வர்மா தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
 ரயிலில் அதன் கொள்ளளவை விட அதிகமான பயணிகள் இருந்தனர்என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தீயை அணைக்கும் பானைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags : உத்தரப்பிரதேசதம் வழியாக செல்லும் டெல்லி _தர்பங்கா விரைவு ரயிலின் மூன்று பெட்டிகளில் தீ விபத்து...

Share via