5-வருடம் தீர்க்காத பிரச்சனை-10 நிமிடத்தில் தீர்த்த ஆணையர்

by Staff / 22-11-2023 03:37:33pm
5-வருடம் தீர்க்காத பிரச்சனை-10 நிமிடத்தில் தீர்த்த ஆணையர்

5-வருடமாக தீர்க்க முடியாத பிரச்சனை- 10 நிமிடத்தில் தீர்த்து வைத்த கரூர் மாநகராட்சி ஆணையர்.
கரூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து ண்டனர்.மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள், புதிய சொத்து வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை, சொத்துவரி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனு அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆணையர் சரவணகுமார்.இதனால், மனு கொடுத்த பத்து நிமிடங்களில் மனுக்களில் காணப்படும் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தனர்.இதில் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் தொழில்வரி செலுத்த கடந்த 5-வருடமாக போராடி வந்துள்ளார். இன்று நடத்திய சிறப்பு முகாமில் மனு செலுத்திய 10 நிமிடங்களில் தனது கோரிக்கையை ஏற்று தீர்வு கண்டதால் மகிழ்ச்சி அடைந்தார்.

இதே போல காந்திகிராமத்தை சேர்ந்த ரோஷ்மி என்ற பெண், கடந்த 2- வருடமாக வீட்டு வரி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.இன்று அளித்த மனுவில் பத்து நிமிடங்களில் அவருக்கு வீட்டு வரி ரசீது அளிக்கப்பட்டது.மனு அளித்த 10- நிமிடங்களில் தீர்வு கண்டதால், ஆணையருக்கும், மேயருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

Tags :

Share via