ஹவாலா கும்பலை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

by Staff / 24-11-2023 02:00:26pm
ஹவாலா கும்பலை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜ், மாதவரம் ஆந்திரா பேருந்து நிறுத்தம் அருகே 3 பேரை சவராரியாக ஏற்றியுள்ளார். ஆட்டோவில் அவர்கள் இந்தியில் பேசியதை வைத்து சந்தேகம் அடைந்த சுந்தர்ராஜ் யானைக் கவுனி அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலில் மூவரிடமும் போலீசார் செய்த விசாரணையில் நெல்லூரைச் சேர்ந்த யாசின், தாவூத், பைசுல்லாவிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1 கோடி பறிமுதல் செய்தனர். இப்பணத்தை வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via