குரூப் -2 முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் அன்புமணி ராமதாஸ்

by Staff / 15-12-2023 03:11:22pm
குரூப் -2 முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் அன்புமணி ராமதாஸ்

குரூப் - 2 முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அன்புமணி; 10 மாதங்களாகியும் குரூப்2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. மாணவர்கள் வாழ்க்கையுடன் டி.என்.பி.எஸ்.சியும், தமிழ்நாடு அரசும் விளையாடக்கூடாது. தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரையும், 10 உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via