4 - மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு விடுமுறை.

by Editor / 17-12-2023 06:07:40pm
4 -  மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு விடுமுறை.

தென்காசி- திருநெல்வேலி- குமரி-  தூத்துக்குடி  மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை திங்கள் கிழமை (18.12.2023)  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ,

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் சாலை மூழ்கியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது..

திருநெல்வேலியிலிருந்து மதுரை- சென்னை செல்லக்கூடிய பேருந்துகள் நான்கு வழிச்சாலையை மட்டுமே பயன்படுத்த முடியும்.  .புதிய பேருந்து நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டைக்குச் செல்லும் சாலை மழை நீரால்  துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்காரணமாக,.தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நாளை 18ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்துள்ளது மீன்வளத்துறை 

 

Tags : 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

Share via