பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்திப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்திற்கு சென்ற மு.க.அழகிரியுடன், அவரது சகோதரர் மு.க.தமிழரசுவுடம் சென்றுள்ளார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொன்முடி சந்தித்திருந்த நிலையில், இன்று மு.க.அழகிரி சந்தித்து பேசியுள்ளார். நீதிமன்ற தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் பொன்முடி, எம்எல்ஏ, அமைச்சர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :