வதோதரா படகு சம்பவம்.. 18 பேர் மீது வழக்கு பதிவு

by Staff / 19-01-2024 02:22:13pm
வதோதரா படகு சம்பவம்.. 18 பேர் மீது வழக்கு பதிவு

குஜராத் மாநிலம் வதோதராவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், விசாரணை நடத்திய போலீசார் இந்த சம்பவத்திற்கு காரணமான 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via