தீவுத்திடலில் ரூ. 50 கோடியில் நிரந்தர சதுக்கம்..
சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு விற்பனையும் இந்த வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் ஒன்றும் இந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. மொத்தம் 30 ஏக்கர் பரப்பில் உள்ள இப்பகுதி 18 ஏக்கர் மற்றும் 12 ஏக்கர் என 2 பிரிவுகளாக உள்ளது.இந்நிலையில் கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி கலையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ரூ. 50கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஏற்படுத்தும்’ என அறிவிக்கப்பட்டது.
Tags :