அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு
பண மோசடி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக காவல் ஜன.29ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்படுவது இது 16வது முறையாகும். அவரது ஜாமீன் மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில் இந்த காவல் நீட்டிப்பு உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :